
தென்காசி: சாரல் சீஸன் காலத்தில் குற்றால த்தில் சுற்றுலாப் பயணி கள் கூட்டம் அலைமோதும். இதனால் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டில் சாரல் சீஸன் தாமதமாக தொடங்கியது. பெரும் பாலான நாட்களில் அருவிகளில் குறைவாகவே தண்ணீர் விழுந்தது. இதனால் குற்றாலம் வியாபாரிகள் கவலையடைந்தனர். போதிய மழை பெய்யாததால் அணைகளும் நிரம்ப வில்லை.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையும் தாமதமாக தொடங்கியது. இருப்பினும் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஏராளமான பக்தர்கள் குற்றாலம் வழியாக வந்து, அருவிகளில் நீராடிச் செல்வது வழக்கம். கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8YSbC2Q
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக