offer for you

திங்கள், 6 நவம்பர், 2023

புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்கேடுகளால் வாழ்வாதாரம் இழந்த நெசவுத் தொழிலாளர்கள்!

புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கியத் தொழில்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக நெசவுக்கு இடமுண்டு. இந்த நெசவுத் தொழிலை வளர்க்கும் வகையில் தொடங்கப்பட்டது ‘பாண்டெக்ஸ்’ கூட்டுறவு நிறுவனம். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான ‘பாண் டெக்ஸ்’ நிறுவனம் 1957-ல் தொடங்கப்பட்டு, புதுச்சேரி மாநிலம் முழுவதும் 13-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் இந்நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்டு வந்தன.

தட்டாஞ்சாவடி நெசவாளர்கள் சங்கம்,கருவடிக்குப்பம், லாசுப்பேட்டை, முத்தியால் பேட்டை, வில்லியனூர், சண்முகாபுரம் என பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் 200-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் அவரது குடும்பங்கள் நூலிழை போன்று பின்னிப் பிணைந்த தங்கள் வாழ்வி யலோடு இணைந்த நெசவுத் தொழிலை செய்து வந்தனர். புதுச்சேரி அரசின் கையறு நிலையினால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்று, தற்போது நெசவாளர்கள் குடும்பங்கள் நடுவீதிக்கு தள்ளப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VQ3KeqB
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now