offer for you

புதன், 20 டிசம்பர், 2023

5 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: அனைத்து தரப்பினருடனும் அரசு மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார். நடப்பு 2023-24ம் நிதியாண்டில், டிச.11 வரை மின்னணு பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை 11,660 கோடியை எட்டியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wA8gQNZ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now