
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தைத் தொட்டன. சென்செக்ஸ் 70 ஆயிரம் புள்ளிகளையும் நிப்டி 21 ஆயிரம் புள்ளிகளையும் கடந்து புதிய சாதனை படைத்தன.
இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகின்றன. அந்த வகையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் நேற்று 929 புள்ளிகள் அதிகரித்து 70,514-ல் நிலைபெற்றது. சென்செக்ஸ் முதன்முறையாக 70 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்று சாதனை படைத்துள்ளது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிப்டி, நேற்று 256 புள்ளிகள் உயர்ந்து 21,182-ல்நிலைபெற்றது. நிப்டியும் 21 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dywlzQ5
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக