
கோவை: திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களுக்கும் தங்கம் வாங்குவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.47 ஆயிரத்தை கடந்துள்ளது.
இது குறித்து, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட் ராமன் கூறியதாவது: தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. எதிர்வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை உயரவே அதிக வாய்ப்புள்ளது. விரைவில் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டும். திருமண சீசன் சமயத்தில் கோவையில் தினமும் 200 கிலோஎடையிலான தங்க நகை வணிகம் நடைபெறும். ஆனால் தற்போது 50 சதவீதம் மட்டுமே நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4BbE5a2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக