offer for you

புதன், 27 டிசம்பர், 2023

மழை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த தூத்துக்குடி - ஏரல் வியாபாரிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நெல், வாழை, கொடிக்கால் வெற்றிலை விவசாயத்துக்கு மட்டுமின்றி குண்டூசி முதல் நகைகள் வியாபாரம் வரை பிரசித்தி பெற்றது.

இந்நிலையில், கடந்த 17, 18-ம் தேதிகளில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரல் நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில், ஏரல் நகரின் பிரதான பஜாரில் உள்ள மொத்த அரிசி விற்பனைக் கடைகள், மளிகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், இரும்பு, வெள்ளி மற்றும் நகைக்கடைகள் என, அனைத்து கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாபாரத்தை எதிர்நோக்கி ஜவுளி கடைகளில் வாங்கி வைத்திருந்த துணிகள் அனைத்தும் வீணாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e2GUW7S
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now