
தஞ்சாவூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, வீடுகளில் பொங்கல் வைக்க புதுப்பானை, புத்தரிசி வரிசையில் தஞ்சாவூரில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் புத்தடுப்புகளும் (மண் அடுப்புகள்) மும்முரமாக தயாராகி வருகின்றன. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை. பொங்கல் விழாவின் போது தமிழர்கள் தங்களுடைய வீடுகளில் மண்ணாலான புதிய பானைகளை வைத்து, அதில் வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கலிட்டு படைப்பது வழக்கம். மேலும், வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலும் புதிய மண் அடுப்புகளையே பயன்படுத்துவர்.
பொங்கல் பண்டிகைக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் பொங்கலிட மண்பானைகளுடன் மண் அடுப்புகள் தயாரிப்பதில் தஞ்சாவூர் கீழவாசல், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது செய்யப்படும் மண் அடுப்புகள் சூளையில் சுடப்பட்டு, பின்னர் ஒருவாரம் கழித்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ygSnMbt
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக