
புதுடெல்லி: மின்சார வாகனங்கள், செல்போன்கள் மற்றும் லேப்டாப்களில் லித்தியம் பேட்டரிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 2020-21 ஆண்டில் இந்தியா ரூ.6,000 கோடிக்கும் மேல் லித்தியம் இறக்குமதி செய்தது. இதில் சீனாவில் இருந்து மட்டும் ரூ.3,500 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. லித்தியம் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் அமெரிக்கா தலைமையில் தாது பாதுகாப்பு கூட்டு அமைப்பு (எம்எஸ்பி) கடந்த 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பின்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jBiQ08n
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக