
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை என 10 உள் நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா, கொழும்பு என 13 வெளி நாட்டு விமான சேவைகளும் உள்ளன.
மேலும், பயணிகளை கையாளும் திறனை அதிகரிக்க இங்கு ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்திய விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகளின் ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி இறுதி வாரத்தில் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு வெளி நாட்டு விமான சேவையும், இந்தியாவின் கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு உள் நாட்டு சேவையும் தொடங்கப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fc7hH6I
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக