
கமுதி: கமுதியில் அமைக்கப்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலம் 848 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 77 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுற்றுச்சூழல் மாசுவை குறைக்க, மத்திய அரசு பசுமை எரிசக்தியை ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதானி நிறுவனம் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி கிரீன் எனர்ஜி என்ற சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது. சுமார் 2,500 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம், 648 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/26sTfze
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக