
பழநி: பழநி பகுதியில் மாம்பூக்களை தேன் பூச்சிகள் தாக்கி வருவதால் விளைச்சல் பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமை, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா வகைகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மா மரங்கள் பூக்கும் தருணங்களில் இதமான காற்று தேவைப்படும். இதன் மூலம் பூச்சித் தாக்குதல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும் என்பதால் பழநியில் கொடைக்கானல் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிக ளிலும், நத்தம், சாணார்பட்டியிலும் அதிக அளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மா மரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L0EHcqX
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக