offer for you

புதன், 21 பிப்ரவரி, 2024

தமிழக வேளாண் பட்ஜெட் பெருத்த ஏமாற்றம்: விவசாயிகள் கருத்து

மதுரை: சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய்த தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக, மதுரை மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை திருமங்கலம் பாசனக் கால்வாய் திட்ட தலைவர் எம்.பி.ராமன் கூறியதாவது: மத்திய அரசு வேளாண் திட்டங்களுக்கு வழங்கும் நிதியை, மாநில அரசு வழங்குவதுபோல் திட்டங்களை அறிவித்துள்ளனர். நூறு நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் நிதியின் மூலம், கிராமப்புற கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தில் ஏரிகள், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், தூர்வாரப்படும் எனவும் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, தேர்தல் வாக்குறுதிகளையே திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6EtYW7X
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now