offer for you

ஞாயிறு, 24 மார்ச், 2024

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள்: அனைத்து கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது விருப்பு, ெவறுப்பின்றி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் டி.ஜெயக்குமார், ஐ.எஸ்.இன்பதுரை, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ரவீந்திரநாத், பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுகநயினார், பீம்ராவ், தேமுதிக சார்பில் ஜி.சந்தோஷ்குமார், எஸ்.கே.மாறன், காங்கிரஸ் கட்சி சார்பில் சந்திரமோகன், எஸ்.கே.நவாஸ், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன், கோபாலகிருஷ்ணன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஸ்டெல்லா மேரி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ், தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதுபற்றி அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6WagdTj
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now