offer for you

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

இந்தியாவில் ஊழியர்களுக்காக 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம்

சென்னை: இந்தியாவில் இயங்கும் ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்காக சுமார் 78,000 வீடுகளை கட்டும் திட்டத்தை ஆப்பிள் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களின் வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் ஆப்பிள் இதனை திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு (மார்ச் 2025) வாக்கில் இந்த வீடுகளின் கட்டுமான பணி நிறைவடையும் என தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது ஆப்பிள். அந்த வகையில் சுமார் 1.5 லட்சம் வேலைவாய்ப்பு நேரடியாக கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்தும் வகையில் வீடு கட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tK8Yxl1
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now