
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, நகைக் கடைகளில் தங்கம் விற்பனை முன்பதிவு மூலமாக தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும், ஐதீகமும் மக்களிடம் உள்ளது.இந்த ஆண்டு அட்சய திருதியை வரும் 10-ம் தேதி காலை 6.33 மணிக்குத் தொடங்கி மறுநாள் சனிக்கிழமை 4.56 மணி வரை உள்ளது. எனவே, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0tzHGOk
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக