offer for you

புதன், 22 மே, 2024

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் 2-வது சிஇஓ: இந்தியர் நிகேஷ் அரோரா புதிய உச்சம்!

நியூயார்க்: பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிகேஷ் அரோரா உலகிலேயே இரண்டாவது அதிக சம்பளம் பெறும் சிஇஓவாக புதிய உச்சத்தை தொட்டுள்ளார். இந்தியரான இவர், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்கை விஞ்சி அதிகம் சம்பளம் பெறுபவராக உயர்ந்துள்ளார் என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 சிஇஓ-க்கள் பட்டியலை வெளியிட்டுள்ள வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், அதில் தான் இந்த தகவலை சொல்லியுள்ளது. அதன்படி, இந்தப் பட்டியலில் பிராட்காமின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாக் டான். நிகேஷ் அரோராவை பொறுத்தவரை 151.43 மில்லியன் டாலரை சம்பளமாக பெற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.1,260 கோடிக்கும் அதிகம். அதேநேரம், மார்க் ஜுக்கர்பெர்க் 24.4 மில்லியன் டாலரும், சுந்தர் பிச்சை 8.8 மில்லியன் டாலரும் சம்பளமாக பெறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ksm689
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now