offer for you

வெள்ளி, 14 ஜூன், 2024

பக்ரீத்: குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் 80 கிலோ எடையுள்ள ஆட்டுக்கு ரூ.1 லட்சம் விலை நிர்ணயம்

கிருஷ்ணகிரி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ளது குந்தாரப்பள்ளி கிராமம். இக்கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் காய்கறி, ஆடு, மாடுகள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். குறிப்பாகம் ஆடு, மாடுகளை விற்பனை செய்யவும், வாங்கவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில் வருகிற 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் குந்தாரப்பள்ளி வாரச் சந்தைக்கு இன்று, விற்பனைக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nOtWMg7
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now