
மும்பை: கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்தது. நேற்றுமுன்தினம் இறுதி கட்ட வாக்குப் பதிவு முடிந்த நிலையில், ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டன.
பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடகங்கள் கணிப்பு தெரிவித்தன. இதனால், இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேபோல், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதனால், அன்றைய தினம் பங்குச் சந்தை புதிய உச்சம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a1o2N8z
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக