
திருநெல்வேலி: “தமிழக முதல்வர் தலைமையில், வரும் பிப்ரவரியில் உலக ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது,” என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மண்டல அளவிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு, 123 பயனாளிகளுக்கு ரூ.47.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தொழில் மைய மேலாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q61etdl
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக