offer for you

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

கோயம்பேடு சந்தையில் குறைந்துவரும் காய்கறி விலை: முட்டைகோஸ், முள்ளங்கி தலா ரூ.10

சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்து வருகிறது. முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய் ஆகியவற்றின் விலை கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதலே காய்கறிகளின் விலை உயரத்யது. தக்காளி கிலோ ரூ.70 வரை உயர்ந்தது. பீன்ஸ் ரூ.110, முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கும் அதிகமாக விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.

குறிப்பாக தக்காளி கிலோ ரூ.23 ஆக குறைந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டு வருகிறது. முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய் தலா ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q4bI83d
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now