
புதுடெல்லி: நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ரீடெயில் பிரிவு உள்ளது. இந்த நிலையில், விற்பனையில் மந்தநிலை காரணமாக கடந்த 2023-24 நிதியாண்டில் 52,000 வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன.
குறிப்பாக, லைப்ஸ்டைல், மளிகை மற்றும் விரைவு - சேவை உணவகங்களில் 26,000 பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அப்பிரிவுகளில் வேலை செய்யும் மொத்த பணியாளர் எண்ணிக்கை 4,55,000-லிருந்து கடந்த நிதியாண்டில் 4,29,000-ஆக குறைந்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில், டைட்டன்,ரேமண்ட், பேஜ், ஸ்பென்சர்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அல்லது 52,000 குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VID65UG
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக