
புதுடெல்லி: நட்சத்திர ஓட்டல்கள், மருத்துவமனைகள், கருத்தரிப்பு மையங்கள் உள்ளி்ட்டவற்றில் நிகழும் அதிக மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்துள்ளது.
பொதுவாக ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்யும்போது அது குறித்த விவரங்களை நிதிப் பரிவர்த்தனை அறிக்கை மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை. இதனால் நிகழும்வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நட்சத்திர ஓட்டல்கள், உயர்தர பிராண்டுகளின் விற்பனையகங்கள், மருத்துவமனைகள், கருத்தரிப்பு மையங்களில் மேற்கொள்ளப்படும் அதிகமதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க மத்தியநேரடி வரிகள் வாரியம் முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வருமான வரித் துறையை மத்திய நேரடி வரிகள் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படும் திருமணம், ஏனைய நிகழ்ச்சிகளுக்கான பணப்பரிவர்த்தனைகள் கண்காணிக் கப்படும் என்று கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bqf0eD3
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக