
சென்னை: உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் சுற்றுலாத்தலங்களில் அவர்கள் தங்குவதற்கு புதிய ஹோட்டல்கள் அமைப்பது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோருடன் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் முன்னணி ஹோட்டல் நிர்வாகிகள், சுற்றுலாத் தொழில் முனைவோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சுற்றுலாத் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன் தலைமையில் சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை ஆணையரும், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநருமான சி.சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K8qx10G
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக