
திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் 7 சதவீத கூலி உயர்வு வழங்காததால், பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று (ஆக.22) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்கனவே செய்து கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி, நடப்பாண்டுக்கு பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 7 சதவீத கூலி உயர்வை வழங்காமல் உள்ளனர். இதனால் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி விட்டு இன்று முதல் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g6MA9oR
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக