
புதுடெல்லி: “உலகப் பொருளாதாரம் எனும் ரயிலில் இந்தியா ஒரு பெட்டி அல்ல; மிகப் பெரிய இஞ்சின்களில் ஒன்று” என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 47-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, "உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த போதிலும், வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா நம்பிக்கையுடன் பயணிக்கிறது. புதிய இந்தியாவின் தொடர்ச்சியான எழுச்சி, முழுமையான உறுதியுடன் உள்ளது. அமிர்த காலத்தில் உள்ள இந்தியா, உலகளவில் ஒப்பிடமுடியாத மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், ஒப்பீட்டளவில் இலகுவான கடன் சுமைகளைக் கொண்டு முன்னேறி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GFfPVbY
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக