
கொல்கத்தா: அண்டை நாடான வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பம், கலவரம், கொந்தளிப்பான சூழல் எதிரொலியால், இந்தியா - வங்கதேசம் இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்கு வங்க ஏற்றுமதியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் உஜ்ஜல் ஷாஹா கூறுகையில், “வங்கதேசத்தின் சுங்க அதிகாரிகள் சரக்குகளைக் கொண்டு செல்ல அனுமதி வழங்காததால், மேற்கு வங்க மாநில எல்லையோர சுங்கச் சாவடி வழியாக நடக்கும் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான லாரிகள் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அத்தியாவசிய பொருள்களுக்கான சேவை தவிர மற்ற சேவைகளுக்கு புதன்கிழமை வரை விடுமுறை அளித்து வங்கதேச அரசு ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vXN9r3y
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக