
மதுரை: மதுரை ‘டைடல் பார்க்’ திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 5.63 ஏக்கர் நிலத்தில் ‘டைடல் பார்க்’ அமைவதாக கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 5.63 ஏக்கர் நிலத்தை ஒப்படைப்பதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y9FcVqG
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக