
சென்னை: அமெரிக்க மத்திய வங்கியில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவதை பொறுத்து வரும் நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம் தீர்மானிக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம்தேதி பவுன் ரூ.42,280 என்ற அளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம்விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 எனும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 எனும் புதிய உச்சத்தை அடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QDvCLAo
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக