
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகை உட்பட பல்வேறு விற்பனை நிலையங்களில் பட்டு, பருத்தி புடவை உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் விற்பனை தொடங்கி உள்ளது. ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, நாடு முழுவதும் உள்ள 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LV8AumK
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக