
திண்டுக்கல்: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து இன்று ஒரே நாளில் 30 டன் பூக்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சனிக்கிழமை வரை தினமும் 30 டன் பூக்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
திண்டுக்கல் சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிக பரப்பில் பூ சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் கொண்டுவரும் பூக்களை கொள்முதல் செய்ய திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைந்து விற்பனையான நிலையில் தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச்செல்வதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கேரளாவுக்கு வாடாமல்லி, செண்டுமல்லி, செவ்வந்தி, பட்ரோஸ், அரளி உள்ளிட்ட பல வண்ணப்பூக்கள் அத்தப்பூ கோலமிடுவதற்காக வாங்கிச்செல்லப்படுகிறது. இன்று (செப்.11) ஒரே நாளில் மட்டும் லாரிகளில் 30 டன் பூக்கள் கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. வாடாமல்லி ஒரு கிலோ கடந்தவாரம் வரை ரூ.15-க்கு விற்றது. தற்போது கேரளாவுக்கு அதிக அளவில் வாங்கிச் செல்வதால் ஒரு கிலோ ரூ.50 வரை விற்கப்படுகிறது. பட்ரோஸ் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்றது, தற்போது ரூ.70-க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hBj2UvJ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக