offer for you

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

பங்குச் சந்தை வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா: மோர்கன் ஸ்டான்லி தகவல்

புதுடெல்லி: பங்குச் சந்தை முதலீட்டு வளர்ச்சிக் குறியீட்டு அடிப்படையில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமான வளர்ச்சி, அதிக அந்நிய பங்குமுதலீடு ஆகியவை காரணமாக எம்எஸ்சிஐ முதலீடு செய்யத்தக்க பங்குச் சந்தை குறியீட்டில் சீனாவை விட இந்தியா அதிக மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்திய பங்குச் சந்தை மீதான மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் மதிப்பீடு 22.27 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், சீன பங்குச் சந்தை மீதான மதிப்பீடு 21.58 சதவீதமாக குறைந்துள்ளது. உலகளாவிய வளரும் பங்குச் சந்தையைக் கொண்ட 24 நாடுகளின் பெரிய, நடுத்தர, சிறிய பங்குகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து இந்தக் குறியீட்டை மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் வழங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rvCxsGj
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now