
மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரையில் ரசாயனம் கலக்காத சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் தோட்டக் கலைத் துறை சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் சிறிய அளவிலான மண் தொட்டி, மண்புழு உரம், கீரை விதைகள் அடங்கிய தொகுப்புடன் ரூ.125-க்கு இது விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் செப்.7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரசாயனம் கலக்காத, சூழக்கு உகந்த விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைக்கவும் உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QoALimV
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக