offer for you

வியாழன், 3 அக்டோபர், 2024

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: ஒரே நாளில் சென்செக்ஸ் 1,769 புள்ளிகள் சரிவு

மும்பை: மத்திய கிழக்கில் நிலவும் போர் தீவிரம் மற்றும் ஹெவிவெயிட் பங்குகளான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி நிறுவனப் பங்குகளின் சரிவால் இந்திய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கடும் வீழ்ச்சி நிலவியது. தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் வர்த்தக நேரத்தின் இறுதியில் 1,769.19 (2.10 சதவீதம்) புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 82,497.10 ஆக இருந்ததது. வர்த்தக நேரத்தின்போது இது 1,832.27 (2.17 சதவீதம்) புள்ளிகள் வரை சரிவடைந்து 82,434.02 ஆக இருந்தது. அதேபோல் நிஃப்டி 546.80 (2.12 சதவீதம்) புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,250.10 ஆக இருந்தது.

தொடரும் அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம் மற்றும் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் ஆகியவை முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மும்பை பங்குச்சந்தையில் எல் அண்ட் டி, ரிலையன்ல் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா வங்கி, டைட்டன், அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டிருந்தன. ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fz6VuAj
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now