offer for you

வெள்ளி, 18 அக்டோபர், 2024

ராமநாதபுரம் ஸ்பெஷல்: ரூ.28 கோடிக்கு இந்த ஆண்டு கருப்பட்டி உற்பத்தி!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு 1,300 டன் கருப்பட்டி ரூ. 28 கோடி மதிப்புக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கருப் பட்டியை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்தால் பனைத்தொழிலாளர் வாழ்வாதாரம் மேம் படும் என ராமநாதபுரம் மாவட்ட பனைத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் 2018 கணக்கின்படி சுமார் 2.50 கோடி பனைமரங்கள் உள்ளதாகவும், இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 லட்சம் பனைமரங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழிலுக்கு, அடுத்தபடியாக பனைத் தொழில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனைமரத் தொழில் மற்றும் அது சார்ந்த உப தொழில் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சாயல்குடி, திருப்புல்லாணி, ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் பனைமரத் தொழில் நடைபெறுகிறது. இத்தொழில் ஜனவரி தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MpOsLda
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now