
வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவுக்கு நடப்பு ஆண்டில் ரூ.665 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 63% அதிகம் ஆகும். இதில் பெரும் பகுதி பங்குகளாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மைக் ரோசாஃப்ட் மென்பொருளில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்' என்ற சைபர் செக்யூரிட்டி பிரச்சினை ஏற்பட்டது. இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் தளங்கள் முடங்கின. இந்தப் பிரச்சினை காரணமாக தனக்கான ஊதியத்தை குறைத்து வழங்கும்படி சத்ய நாதெல்லா கோரி இருந்தார். எனினும், அவருக்கு முந்தைய ஆண்டை விடவும் அதிக அளவில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AODCv1c
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக