
கோவை: கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு உற்பத்தித் துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் சராசரி (8.33 சதவீதம்) அளவை ஒட்டியே போனஸ் வழங்கப்படுவதாகவும், பல நிறுவனங்கள் நெருக்கடி காரணமாக தீபாவளிக்கு ஒரு பகுதி, பொங்கலுக்கு ஒரு பகுதி என போனஸை பிரித்து வழங்கி வருவதாகவும் தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
தொழில் நகரான கோவை மாவட்டம் ஜவுளி, ஆட்டோ மொபைல் உதரி பாகங்கள், பம்ப்செட், வார்ப்படம், கிரைண்டர், பொறியியல் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு தொழில் நிறுவனங்களில் நெருக்கடி நிலவுவதால் சராசரி அளவை (8.33 சதவீதம்) ஒட்டியே போனஸ் வழங்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zBqjZrw
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக