
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. தமிழக உணவு பாரம்பரியத்தில் சாம்பாருக்கு முக்கிய இடம் உள்ளது. சாம்பார் செய்ய கத்தரிக்காய்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவது முருங்கைக்காய். கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் வரத்து அதிகரித்த நிலையில் கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்திருந்தது.
கடந்த வாரம் கூட கிலோ முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக வரத்து குறைந்து அதன் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uoBYKSI
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக