offer for you

வெள்ளி, 1 நவம்பர், 2024

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்வு

புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபர் மாதத்தில் மொத்தம் ரூ.1.87 லட்சம் கோடி என்றும், இது ஆண்டுக்கு 8.9 சதவீத அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்றும் நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2023-ல், மொத்த வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக இருந்தது. சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் அனைத்தும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை அதிகாரப்பூர்வ தரவு சுட்டிக்காட்டுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oAGkTlV
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now