
சென்னைப் புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையின் முன்னேற்றம் பிரம்மாண்டமானதாக இருந்தாலும், அதற்கு இணையாகத் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும் நிலங்கள் விற்பனையாகின்றன. சென்னை புறநகர்ப் பகுதிகளில், நிலம் வாங்க முடியாதவர்கள், எந்தெந்த இடங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற கேள்வி, பலரது மனதிலும் எழுந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் துறையில் மிக வேகமான முன்னேற்றம் கண்டு வருவது கோவை மாநகரம் என்பதுதான் கட்டுமானத் துறையைச் சேர்ந்த பலரது கருத்து. கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் புதிது புதிதாக வீடுகள் கட்டப்பட்ட போதிலும், இங்கு முதலீட்டுக்கான இலக்குகள் அதிகம் இருப்பதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கோவை - அவிநாசி சாலையும், அதனை ஒட்டிய பகுதிகளும் கடந்த 10 ஆண்டுகளில் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியிருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DBJYn0m
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக