offer for you

செவ்வாய், 17 டிசம்பர், 2024

வருமான வரி தாக்கல் செய்யாத தனிநபர்களிடம் ரூ.37,000 கோடி வசூல்

வருமான வரி துறையின் தீவிர சோதனையின் விளைவாக கடந்த 20 மாதங்களில், வரிவிதிப்புக்கான வருமானம் இருந்தும் வருமான வரி தாக்கல் செய்யாத தனிநபர்களிடமிருந்து ரூ.37,000 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வருமான வரி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2020-21-ம் நிதியாண்டு முதல் தரவு பகுப்பாய்வு முறை மற்றும் வருமான வரி படிவங்களை உரிய முறையில் தாக்கல் செய்யாதவர்கள் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆதாரங்களில் இருந்து தரவுகள் எடுக்கப்பட்டு ஒத்திசைத்து பார்க்கப்படுகிறது. இந்த முறையானது வரி வாய்ப்பு செய்பவர்களை எளிதாக அடையாளம் காண உதவுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hMsn1q7
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now