
கோவை: மாறி வரும் காலத்துக்கு ஏற்ப குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். என, இந்திய அரசின் எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் உறுப்பினர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய சங்கத்தின்(வாஸ்மி) இயக்க செயலாளர் சஞ்சிவ் லாயக் தெரிவித்தார்.
இந்திய அரசின் எம்எஸ்எம்இ அமைச்சகம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உலகளாவிய சங்கம்(வாஸ்மி), இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் ஆகியவை சார்பில் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்த பன்னாட்டு கருத்தரங்கு கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவாந்தா ஓட்டலில் வியாழக்கிழமை நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AZlQbhz
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக