
புதுடெல்லி: ஆசியாவில் மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாயும் இடம்பெற்றுள்ளதாக மக்களவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதில்: மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி, சர்வதேச சவால்களுக்கு இடையிலும் ஆசிய அளவில் சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாய் உருவெடுத்துள்ளது. அது தனக்கான இடத்தை வலுவான நிலையில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆசிய அளவில் ரூபாயின் செயல்பாடு வலிமையாக இருப்பது இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1b9T2Af
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக