
சென்னை: கிராமப் புறங்களில் அரசின் இணைய சேவை வழங்கும் திட்டத்துக்கு, உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தொழில்முனைவோர் விண்ணப்பிக்க அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இணைய பரவலில் தமிழகம், இந்தியாவிலே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கரோனா காலத்துக்கு பிறகு கிராமப் புறங்களில் வசித்து வரும் குடும்பங்கள் பலரும் செல்போன் மூலம் இணையத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு இடையேயான டிஜிட்டல் சேவைக்கான இடைவெளியை குறைக்க, அனைவருக்கும் இணைய சேவையை வழங்குவதே ஜனநாயகமாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Nl7VwWr
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக