
சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவு காகிதத்துக்கான சுங்க வரியை மத்திய அரசு பூஜ்யமாக குறைக்க வேண்டும் என இந்தியா வேளாண் மற்றம் மறுசுழற்சி காகித ஆலைகள் கூட்டமைப்பு (ஐஏஆர்பிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது: இந்திய காகிதத் துறை ஆண்டுதோறும் 24 மில்லியன் டன் காகிதம் மற்றும் காகிதம் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து உலகளவில் 5-வது இடத்தில் உள்ளது. இத்துறையை நம்பி நேரடியாக 5 லட்சம் , மறைமுகமாக 15 லட்சம் என மொத்தம் 20 லட்சம் பேர் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pf8T02R
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக