
புதுடெல்லி: “பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெறும். புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள், மூலதனம் ஆகியன தான் இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக இருக்கின்றன. அந்தவகையில், இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகம் தரும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜன.31) தொடங்கியுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oGDBp82
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக