
மதுரை: தமிழக அளவில் சொத்து வரி வசூலில், மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம்பிடித்துள்ளது. ஒவ்வொரு அரையாண்டிற்கும் நினைவூட்டல் நடைமுறை அறிமுகப்புடுத்தப்பட்டு, தற்போது முதல் முறையாக மாநகராட்சி வரலாற்றில் சொத்து வரி செலுத்துவதற்காக 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டிடங்களுக்கு மாநகராட்சி ஒவ்வொரு அரையாண்டிற்கு ஒரு முறையும் சொத்து வரி வசூல் செய்கிறது. சொத்து வரி மூலம் ஆண்டிற்கு மாநகராட்சிக்கு ரூ.247 கோடி வருவாய் கிடைக்கிறது. தமிழக அளவில் சென்னை, கோவைக்கு அடுத்து மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. கோவை, சென்னையில் ஏராளமான தொழிற்பேட்டைகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளதால் அவர்களுக்கு சொத்துவரி அதிகளவு கிடைக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mgK0NYV
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக