
மதுரை: ஜனவரி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் இன்று மதுரை மல்லிகைப் பூ கிலோ ரூ.4,200க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் உள்ள முக்கியமான மலர் சந்தைகளில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் முக்கியமானது. இந்த மார்க்கெட்டிற்கு, தென் மாவட்டங்களில் இருந்து பூக்கள் அதிகளவு வருகிறது. பூக்களில் மனமும், நிறமும் மிகுந்த மதுரை மல்லிகைப்பூக்கள், இந்த சந்தைக்கு அதிகளவு வரும். மல்லிகைப் பூக்களுக்கு விழாக்காலங்கள் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது.
'கரோனா'வுக்கு பிறகு மல்லிகை சாகுபடி குறைந்ததால் பூக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், சாதாரண முகூர்த்த நாட்களில் கூட மல்லிகைப்பூக்கள் விலை உச்சத்திற்கு சென்றுவிடுகிறது. தொடர் பனிப்பொழிவு காரணமாக தற்போது மதுரை மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், மல்லிகைப்பூக்கள் வரத்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு வருகை குறைந்தது. அதனால், மல்லிகைப் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gUhy10t
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக