
அரசாங்கம் முதல் கடைக்கோடி மனிதன் வரை அனைவருக்கும் பொதுவான ஓர் அம்சம் - கடன். நெருக்கடி காலத்தில் பேருதவியாக இருக்கும் கடன், தீவிரமான பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து விடுவதாக புகார்கள் எழுகின்றன. இவற்றுக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில், சட்டவிரோதக் கடன்களை வரையறைக்குள் கொண்டு வரும் விதமாக, மத்திய அரசு தற்போது, ‘வரையறுக்கப்படாத கடன் தடை மசோதா’ ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, ‘கடன்’ - தனிப்பட்ட முறையில் ஓர் அவமானமாக, ஒருவரின் இயலாமையைக் குறிப்பதாக இருந்தது. ஆனால், ‘நவீனப் பொருளாதாரம்’, கடன் குறித்த புதிய சிந்தனையை, புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தி, ஆழமாக வேரூன்ற வைத்து விட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vlBUozk
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக