
மும்பை: ஹிண்டன்பர்க் நிறுவனர் நடே ஆண்டர்சன் தனது ஆய்வு நிறுவனத்தை கலைக்கப்போகும் முடிவினை அறிவித்த சில மணிநேரத்தில் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று கடுமையாக உயர்ந்தன. இந்நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பங்கு முறைகேடு குற்றச்சாட்டை வைத்தது குறிப்பிடத்தக்கது.
தனது நிறுவனத்தினை மூடுவது குறித்து நடே ஆண்டர்சன் கூறுகையில், “நாங்கள் மேற்கொண்டுவந்த திட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கடைசி வழக்கான போன்ஸி வழக்கை முடித்துவிட்டோம். அதனை அதிகாரிகளிடம் பகிர்ந்தும் கொண்டோம். அதன்படி, இன்று தான் எங்களின் கடைசி நாள்" என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KEY69OC
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக