offer for you

வெள்ளி, 17 ஜனவரி, 2025

அறிமுகம் இல்லாத நபர்களிடம் செல்போனை கொடுத்தால் வங்கி கையிருப்பு காலி: ஜெரோதா சிஇஓ எச்சரிக்கை

புதுடெல்லி: செல்போனில் புதிய செயலியை பதிவிறக்கும் செய்தும், செட்டிங்கை மாற்றியும் வங்கி கையிருப்பை காலி செய்யும் புது மோசடி நடைபெறுவது குறித்து ஜெரோதா நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கி கையிருப்பை காலி செய்யும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த மோசடி சம்பவங்கள் புதுப்புது முறைகளில் அரங்கேறி வருகின்றனர். அதுபோன்ற புது மோசடி குறித்த வீடியோ ஒன்றை ஜெரோதோ என்ற ஆன்லைன் பங்குச் சந்தை வர்த்தக நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மோசடி நபர்கள் எவ்வாறு செயல்பட்டு அப்பாவிகளின் வங்கி பணத்தை சுரண்டுகின்றனர் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UWTOsPM
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now